×

எலக்ட்ரிக் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்யாறு அருகே

செய்யாறு, ஆக 4: செய்யாறு அருகே எலக்ட்ரிக் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செய்யாறு அடுத்த அசனமாப்பேட்டை கிராமத்தைச்சேர்ந்தவர் சுகுமார்(49), இவர் அப்பகுதி கூட்ரோட்டில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் காலை அவரது வீட்டின் மேல்மாடி அறையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சுகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து அவரது மகன் கோகுலவாசன், மோரணம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து சுகுமார் தூக்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post எலக்ட்ரிக் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்யாறு அருகே appeared first on Dinakaran.

Tags : Yar. Seiyaru ,Seiyaru ,Asanamappettai ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் கண்டக்டர் மண்டை உடைப்பு...